Thursday 4 July 2013

குழந்தை பாக்யம் 5 வருசமா இல்லை.


குழந்தை பாக்யம் 5 வருசமா இல்லை...ஜாதகம் பார்த்து எப்போ அமையும்ன்னு சொல்லுங்கன்னாங்க...ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் தான் உயிரணு பத்தி சொல்லும் கிரகம்..அது கெட்டுபோயிட்டா உயிரணு குறைபாடு இருக்கும்..பெண் ஜாதகத்தில் செவ்வாய் கர்ப்பபை..ரத்தம் சம்பந்தமான விசயத்தை சொல்லும் இடம்..அது கெட்டிருந்தா மேற்படியான கோளாறுகளை தரும்..இரண்டு பேருக்கும் சுக்கிரன்,செவ்வாய் பாதிச்சிருக்கு...உணவு கட்டுப்பாடு அவசியம் இரண்டு பேருயுக்கும் உடல் உஷ்ணம் அதிகம் இருக்கு அது குறையனும்..மட்டன் சாப்பிடாதீங்க..பழ உணவு அதிகம் எடுத்துக்குங்க...மாதுளம் பழம் சாப்பிட்டா கர்ப்பபை பிரச்சினை தீரும்..செவ்வாழை சாப்பிட்டா உயிரணு குறைபாடு தீரும்..வாரத்துல ஆண் சனிக்கிழமையும் பெண் வெள்ளிக்கிழமையும் நல்லெண்ணைய் குளியல் எடுத்துக்க்குங்க...அமாவாசை,பெள்ர்ணமி,போன்ற நாட்களில் தாம்பத்யம் வேணாம் ..திருச்செந்தூர்ல இரண்டு நாள் தங்கிட்டு வாங்க ந்னு சொன்னேன்..அவங்க யோசிச்சிட்டு...சார் சிம்பிளா ஏதாவது பரிகாரம் சொல்லுங்க..நீங்க சொல்றதெல்லாம் கடைபிடிக்கிறது ரொம்ப சிரமம்..ஜாதகப்படி எப்போ கிடைக்கும்னு மட்டும் சொல்லுங்கன்னாங்க...கல்யாணம் ஆனாலே குழந்தை பிறந்துடும்னு நம்புறவங்க போலிருக்கு..என்னத்த சொல்றது! Like · · Share · 20 hours ago ·

Wednesday 3 July 2013

ஹோமம் செய்வதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள்


ஹோமம் செய்வதால் உடலிற்கு ஏற்படும் நன்மைகள்! ஜூலை 03,2013 அ- அ+ நம் வீடுகளில் திருமணம், புதுமனைப்புகுவிழா, கோயில் கும்பாபிஷேகம், மழை, குழந்தை வரம், ஆரோக்கியம், செல்வவளம் போன்ற தேவைகளுக்காக யாகம் செய்வதைக் காண்கிறோம். அந்தக்காலத்தில், மன்னர்கள் இதை பெரும் பொருட்செலவில் செய்துள்ளனர். ரிஷிகள் காடு களில் ஹோமம் நடத்தியுள்ளனர். ஒரு தொழிற்சாலை, வர்த்தக நிறுவனம் திறக்கப்படுறதென்றால் கணபதிஹோமம் நடத்தப்படுகிறது. இதற்கு ஆன்மிக காரணங்கள் பல சொல்லப்பட்டாலும், அறிவியல் காரணமும் ஒளிந்து இருக்கிறது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் விஷவாயு பிரச்னையின் போது, ஒரே ஒரு குடும்பம் மட்டும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தது. இதற்கு காரணம், அந்த குடும்பத்தில் அடிக்கடி ஹோமம் நடத்துவதை வழக்கமாக கொண்டு இருந்தது தான். இந்த தகவல் அப்போது பல பத்திரிகைகளில் வெளி வந்தது. ஹோமத்தின் போது. வெளிப்படும் புகை காற்றில் பரவியுள்ள நச்சுக்கிருமிகளை முற்றிலும் அழித்து விடும். யாகத்தில் இடும் நெய், அரிசி ஆகியவற்றால் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உண்டாகும் வாயுக்கள் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, தலைவலி, குடல்புண் போன்ற வியாதிகளை போக்கும் சக்தி கொண்டது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்தி ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் யாகசாலை பூஜை முடிந்தபிறகு, அந்த இடத்தில் அமர்ந்து மூச்சுப் பயிற்சி, தியானம் செய்யும் வழக்கம் இருந்தது. இதன்மூலம் உடல்நலத்தை சிறப்பாகப்பேணினர்

Saturday 4 May 2013

கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!!


கோவில் வழிபாட்டில் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்!!! ----------------------------- * பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்க கூடாது * வீண் வார்த்தைகளும் தகாத சொற்களும் சொல்லகூடாது * சோம்பல் முறித்தல், தலை சிக்கேடுத்தல், தலைவிரித்துப் போட்டுகொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல் கூடாது * பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் செல்ல கூடாது * கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிய கூடாது * கொடிமரம், பலிபீடம், நந்தி, கோபுரம் நிழலை மிதிக்க கூடாது * கவர்ச்சியான ஆடைகள் அணிய கூடாது * நந்தி தேவருக்கும் சிவனுக்கும் நடுவில் போக கூடாது * தரிசனம் செய்தபின் பின்னால் சிறிது தூரம் நடந்து திரும்ப வேண்டும் * ஒரு கையால் தரிசனம் செய்ய கூடாது * மேலே துண்டுடன் தரிசனம் செய்ய கூடாது * கோவிலில் உண்ண கூடாது, உறங்க கூடாது * கோவிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமர கூடாது * பலி பீடத்திற்கு உள்ளே சந்நிதியில் மற்றவரை வணங்க கூடாது * கோவில் சொத்துக்களை எந்தவிதத்திலும் அபகரிக்க கூடாது * ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது * அஷ்டமி, நவமி, அம்மாவசை, பௌர்ணமி, மத பிறப்பு, சோமவாரம், பிரதோஷம், சதுர்த்தி இந்த நாட்களில் வில்வம் பறிக்க கூடாது. முதல் நாள் மலையிலேயே பறித்து வைத்து கொள்ள வேண்டும் * தெய்வ வழிபடு ஈர உடையுடனும், ஓர் ஆடையுடனும் வழிபட கூடாது * கோவிலுக்குள் குளிக்காமல் செல்ல கூடாது * சன்னதியில் தீபம் இல்லாமல் தரிசிக்க கூடாது * கோவிலுக்கு சென்று வந்த உடனே கால்களை கழுவ கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பின்னர்தான் கால்களை கழுவ வேண்டும் * கோவிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி கடவுளை நமக்குள் உணர்ந்து ஓம் நமச்சிவாய மந்திரம் கூறி வழிபடுவது மிகவும் சிறந்ததாகும் * கோவிலில் நுழையும் போதும் வெளியே வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம் வேண்டும் * ஸ்தல விருட்சங்களை இரவில் வலம் வருதல் கூடாது

Thursday 28 February 2013

பவுர்ணமியில் கிரிவலம் உடல்நலத்திற்கு சிறந்தது ஏன்? பிப்ரவரி 28,2013


பவுர்ணமியில் கிரிவலம் உடல்நலத்திற்கு சிறந்தது ஏன்? பிப்ரவரி 28,2013 அ- அ+ நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். ஓஷதீநாம் பதி: என்று சந்திரனுக்குப் பெயருண்டு. இதற்கு தாவரங்களின் தலைவன் என்று பொருள். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும். பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

Saturday 8 December 2012

நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்


இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் கடாக்ஷம் என்பர். கட என்றால் கடைசி. அக்ஷம் என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்.

Sunday 19 August 2012

காரைதீவில் அற்புதம்! அதிசயம்! தினமும் மக்கள் படையெடுப்பு – (படங்கள் இணைப்பு)


காரைதீவில் அற்புதம்! அதிசயம்! தினமும் மக்கள் படையெடுப்பு – (படங்கள் இணைப்பு) AUGUST 19, 2012 0 காரைதீவிலுள்ள வீடொன்றில் பகவான் சத்திய சாயிபாவாவின் படத்திலிருந்து விபூதி கொட்டோகொட்டென்று கொட்டுகின்றது. காரைதீவு 7 ம் குறிச்சியிலுள்ள குணசேகரம் சாந்தி என்பவரின் வீட்டிலுள்ள சாமியறையில் சாயி படம் மற்றும் அருகிலுள்ள ஏனைய சுவாமி படங்களிலிருந்ததே இவ்ற்புத நிகழ்வு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த அதிசயமானது கடந்த கதிர்காமக் கந்தன் கொடியேற்ற தினமான யூலை 18ம் திகதியிலிருந்து விபூதி வர ஆரம்பித்து, தற்போது ஒரு மாதம் கடந்தும் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. மேலும் அவர்களுக்கு கனவில் பிரசன்னமாகி தனக்கு உணவு பரிமாறுமாறு பகவான் கேட்டுக்கொண்டதற்கு இமைவாக தினமும் உணவும் பாலும் சாயிபாபா படத்தின் முன்னால் நிவேதனமாக படைக்கப்படுகிறது. இவ்வாறு நிவேதனம் வைத்து அரைமணி நேரத்தினுள் அரைவாசி பகுதி முடிந்துவிடும். அவ்வாறான அற்புதமும் நடக்கிறது. இவ்வதிசயத்தை கண்டு தரிசிப்பதற்காக தினமும் பெருமளவான மக்கள் படையெடுக்கின்றனர்.

Sunday 22 July 2012

சித்தம் கலங்காத வித்தகன்!


11 தந்திர யோகம் தந்திர யோகத்தின் ஐந்து மகாரங்களான மது, மாமிசம், மச்சம், முத்திரை, மைதுனம் ஆகியவற்றில் முதல் நான்கு மகாரங்களுக்கான விளக்கங் களை இதுவரையில் கண்டோம். இனி ஐந்தாவது மகாரமான "மைதுனம்' என்பதன் விளக்கத்தைக் காணலாம். மைதுனம் என்ற சொல்லுக்கு நேரடி யான அர்த்தம் என "காமக் கலவி', "புணர்ச்சி', "உடலுறவு' ஆகியவற்றைக் கூறலாம். ஒரு ஆணும் பெண்ணும் கூடுவதே மைதுனம். தந்திர யோக மகாரங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய மகாரம் இதுதான். தந்திர யோகத்தை பலர் இழிவாகக் கருத இந்த மகாரமும் ஒரு காரணமாக உள்ளது. அதே நேரத்தில் மேலைநாட்டினரை தந்திர யோகத்தில் ஈர்ப்பு கொள்ளச் செய்வதும் இந்த மகாரமே! வாமாசார தந்திர யோகத்தில் "உடலுறவு' என்ற நேரடிப் பொருளே எடுத்துக் கொள்ளப்படுகிறது. தட்சிணாசார தந்திர யோகத்தில் மைதுனம் என்பதற்கு வேறு சூட்சுமமான பொருள் உண்டு. முதலில் வாமாசாரத்தில் மைதுனத்தின் பங்கு என்ன என்பதை விரிவாகக் காணலாம். காமத்தைக் கொண்டாடிய நாடு காமம் என்பதும், ஆண்- பெண் கலவி என்பதும் உடல் இச்சையைத் தணித்துக் கொள்ளும் ஒரு வடிகால் என்பதாகவே இன்று சித்தரிக்கப்படுகின்றன; புரிந்துகொள்ளப்படுகின்றன. மேற்கத்திய நாட்டுக் கலாச்சாரங்களில் உருவான ஒரு தவறான புரிதல் இது. கீழைநாட்டுக் கலாச்சாரங்களில் காமமும் கலவியும் வாழ்க்கையின் இயல்பான ஒரு அம்சமாகவே ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. குறிப்பாக, இந்திய கலாச்சாரத்தில் தொன்மையான காலம் தொட்டே காதலும் காமமும் ஆராதனைக்குரியவை யாக- தெய்வீகத் தன்மை கொண்டவையா கவே கொண்டாடப்பட்டு வந்திருக்கின்றன. இல்லற வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து முடித்த பின்னரே வனவாசம் செல்வது நமது மரபாக இருந்திருக்கிறது. வனவாசம் செல்லும் ரிஷிகள்கூட தமது மனைவியரையும் உடன் அழைத்துச் சென்றதாக புராணங்களும் இதிகாசங்களும் கூறுகின்றன. வனவாசத்தின்போது தவம் செய்யும் ரிஷிகளுக்குத் தேவையான பணிவிடைகளை அவர்களது ரிஷி பத்தினிகளே செய்து வந்திருக்கின்றனர். ஆக, இல்லற வாழ்க்கைக்கும், தவ வாழ்க்கைக்கும்கூட ஆணுக்குத் துணையாகப் பெண் இருந்திருக்கிறாள். பெண்ணை "சக்தி' என்று கொண்டாடும் கலாச்சாரம் நம்முடையது. நமது கடவுள்களைக்கூட கணவன்- மனைவியாகவே (இணையுடனே) நமது புராணங்களும் இதிகாசங்களும் சித்தரிக்கின்றன. கோவில்களில்கூட சிற்பங்களின் வழியாக காமத்தைப் போதிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. ஆய கலைகள் 64-ல் மன்மதக் கலையும் ஒன்றாக கற்பித்த நாடு நமது நாடுதான். வாத்சாயனர் எழுதிய காமசூத்திரம் இன்றளவும் மிகச்சிறந்த பாலியல் கல்வி நூலாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆக, காமமும் கலவியும் இயல்பான ஒன்றாகவே இந்திய கலாச்சாரத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது. கிறிஸ்துவ மதத்தின் அடிப்படையில் உருவான மேற்கத்திய கலாச்சாரங்களில் தான் காமமும் கலவியும் "பாவச் செயல்கள்' என்ற சித்தாந்தம் உருவானது. பல மேற்கத்திய கலாச்சாரங்கள் இந்தியாவில் வேரூன்றிவிட்டன. அவற்றுள் இந்த காமம் குறித்த கண்ணோட்டமும் ஒன்று! இன்று இந்தியாவிலும் காமமும் கலவியும் பாவச் செயல்களாகப் பார்க்கப் படுவது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்று. சித்தர்களும் ஏற்றுக்கொண்ட மைதுனம் "பெண்ணாசையைக் கொண்டு பேணித் திரிந்தக்கால் விண்ணாசை வைக்க விதியிலையே கன்மனமே!' -இடைக்காடர். "மை அடர்ந்த கண்ணினார் மயக்கமும் மயக்கிலே ஐ இறந்து கொண்டு நீங்கள் அல்லல் உற்று இருப்பிர்காள்!' -சிவவாக்கியர். "எண்சா ணுடம்பும் மிழியும் பெருவழி; மண்பாற் காமங் கழிக்கு மறைவிடம்!' -பட்டினத்தார். என அனைத்து சித்தர்களுமே பெண்ணை ஆன்மிக வளர்ச்சிக்குத் தடையாக நிற்கும் சக்தியாகவே வர்ணிக்கின்றனர். பெண்ணாசை, மண்ணாசை, பொன்னாசை மூன்றையும் துறந்த வனுக்கே ஞானத்தின் கதவுகள் திறக் கும் என்பதே நமது சித்தர்களின் போதனையாக உள்ளது. ஆனால் நமது சித்தர்கள்கூட தந்திர யோக மகாரமான மைதுனத்தை ஏற்றுக்கொள்கின்றனர். "மைதுனம்' என்பது உடல் இச்சையைத் தீர்ப்பதற்கு அல்ல; சில பிரத்தியேக பயிற்சிகளின் மூலம் மைதுனத்தை ஆன்மிக வளர்ச்சிக்கு உதவும் ஒரு கருவியாக அவர்கள் பயன்படுத்தினர். மைதுனம் எனும் மகாரத்தை திருமூலர் "கட்டில்மேல் பயிலும் யோகம்' என வர்ணிக்கிறார். "பரியங்க யோகம்' என்ற தலைப்பின்கீழ் "மைதுனம்' திருமந்திரத்தில் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒரு ஆணின் உடலில் "விந்து' எவ்வாறு உருவாகிறது? அதன் செயல்பாடுகள் என்ன என்பன இப்பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. வளர்பிறைக் காலத்தில் அல்லது தேய்பிறைக் காலத்தில் சம்சாரிகள் புணர்ச்சியில் ஈடுபட சரியான நேரம் எது? சிவ நெறியில் செல்லும் தவ யோகிகள் மைதுனத்தில் ஈடுபட சரியான நேரம் எது? அந்த நேரத்தில் மூச்சு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் இப்பகுதியில் விளக்கப் பட்டுள்ளது. சாதாரணமாக மைதுனத்தின்போது ஆணின் விந்து கீழ் நோக்கிச் செல்லும் (வெளியேறும்). ஆனால் தந்திர யோக மைதுனத்தில் மூலாதாரத்தின் அருகே உறங்கிக் கிடக்கும் குண்டலினி சக்தியை (மூலக் கனல் என திருமந்திரம் கூறுகிறது) எழுப்பி, அதன்மூலம் விந்துவை எரித்து, அதன் சக்தியை சுழுமுனை நாடி வழியாக சகஸ்ரார சக்கரத்தில் ஏற்றும்போது, அங்கிருக்கும் சோதியின் (சிவனின்) தரிசனம் கிடைக்கும். அப்போதுதான் சந்திர மண்டலத்திலிருந்து (பிந்து சக்கரம்) அமுதம் ஊற்றெடுக்கும். அதை மீண்டும் மீண்டும் உண்பவரே சிவயோகியர் ஆவர். இதையே திருமந்திரத்தின் கீழ்க்கண்ட பாடல் விளக்குகிறது. "வற்ற அனலைக் கொளுவி, மறித்து எரித்து உற்ற சுழுனைச் சொருக்கிச் சொருக்கிச் சுடர் ஊற்று முற்றும் மதியத்து அமுதை முறை முறை சென்று உண்பவரே சிவயோகியாரே!' -திருமந்திரப் பாடல் எண்: 1927. இதே கருத்தை விளக்கும் மற்றும் ஒரு திருமந்திரப் பாடலும் உள்ளது. "வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே கள்ளத் தட்டார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல்வழி யேசென்று வள்ளி உண்நாவில் அடக்கி வைத்தாரே!' -திருமந்திரப் பாடல் எண்: 834. இப்பாடலில் பல தந்திர யோக உண்மைகள் உவமைகள் மூலம் சூட்சுமமாக உணர்த்தப்பட்டுள்ளன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஏதோ பொற்கொல்லர் வெள்ளியையும் பொன்னையும் உருக்குவது குறித்து விளக்கும் பாடலாகத் தோன்றும். ஆனால் இது பரியங்க யோகத்தை (தந்திர யோக மைதுனத்தை) விளக்கும் ஒரு அருமையான பாடலாகும். வெள்ளி என்பது ஆணின் சுக்கிலத்தையும் (விந்து), பொன் என்பது பெண்ணின் கருமுட்டையையும், "கள்ளத் தட்டார்' என்பது தந்திர யோகியையும், "குழல்' என்பது சுழுமுனை நாடியையும், வள்ளி (சந்திரன்) என்பது பிந்து சக்கரத்தையும் சூட்சுமமாகக் குறிக்கின்றன. சாதாரணமாக கலவியில் ஒரு ஆணும் பெண்ணும் ஈடுபடும்போது, ஆணின் விந்து பெண்ணின் கருமுட்டையை நோக்கிச் செல்லும். இதுவே இயற்கையின் நியதி. ஆனால் பரியங்க யோகத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணையும்போது, ஆணின் சுக்கிலம் பெண்ணின் கருமுட்டையை நோக்கிச் செல்லாது. கள்ளத்தட்டானாகிய தந்திர யோகி தனது மூலக் கனலாகிய குண்டலினியை எழுப்பி, அந்த விந்துவை எரியச் செய்து, அதன் சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலே கொண்டு செல்கிறான். இந்த சக்தியினால் அவனது பிந்து சக்கரம் தூண்டப்பட்டு அதிலிருந்து அமுதம் சுரக்கத் துவங்கும் என்பதே இப்பாடலின் கருத்தாகும். தந்திர யோக மைதுனத்தால் தந்திர யோகிக்கு என்ன பலன்? இதற்கான விடையையும் ஒரு திருமந்திரப் பாடலிலிருந்தே காணலாம். "வைத்த இருவரும் தம்மில் மகிழ்ந்து உடன் சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம் பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும் வித்தகனாய் நிற்கும் வெங்கதி ரோனே!' -திருமந்திரப் பாடல் எண்: 835. பரியங்க யோகக் கலவியில் ஒரு ஆணும் பெண்ணும் ஈடுபட்டு ஆனந்தம் அடையும் போது, பத்து திசையும் பதினெட்டு தேவர்களும் புகழ, தந்திர யோகி மேலான அறிவு பெற்ற வித்தகனாவான். சூரியனைப் போன்று அவன் பிரகாசிப்பான் என்பதே இந்தப் பாடலின் சுருக்கமான பொருளாகும். இந்தப் பாடலில் உள்ள மிக சூட்சுமமான வார்த்தை "சித்தம் கலங்காது' என்பதேயாகும். சாதாரணமாக கலவியில் ஒரு ஆணும் பெண்ணும் ஈடுபடும்போது அவர்கள் தன்னிலை மறந்து (சித்தம் கலங்கி) அதில் ஈடுபடுகிறார்கள். புலன்கள் அனைத்தும் கிளர்ந்து எழுகின்றன. கலவியின் உச்ச கட்டத்தில் "சித்தம்' என்பது அவர்கள் வசமில்லாத ஒரு பேரானந்த நிலையை அடைகின்றனர். ஆனால் பரியங்க யோக மைதுனத் தில் ஈடுபடும் யோகியின் சித்தமும் புலன்களும் அவனது கட்டுப் பாட்டிற்குள் இருக்கும். சித்தம் கலங்கிய நிலை இராது. இந்த ஞான நிலையை அடையும் ஒரு கருவியாகவே தந்திர யோகி பயன்படுத்திக் கொள்கிறான். வாமாசார தந்திர யோகத்தில் பெண் வாமாசார தந்திர யோகத்தில் பெண்ணுக்கு மிக முக்கியமான ஒரு பங்கு உள்ளது. "ஆண்' என்பவன் நிலை சக்தி (நற்ஹற்ண்ஸ்ரீ ஊய்ங்ழ்ஞ்ஹ்); பெண் என்பவள் இயங்கு சக்தி (ஆஸ்ரீற்ண்ஸ்ங் ஊய்ங்ழ்ஞ்ஹ்). இவை இரண்டும் இணையும்போதுதான் "சக்தி' முழுமையடைகிறது. "சிவன் இல்லையேல் சக்தி இல்லை; சக்தியின்றி சிவனும் இல்லை' என்பதே வாமாசார தந்திர யோக கோட்பாடா கும். வாமசாரத்தில் பல பூஜைகளுக்கும், யாகங்களுக்கும்கூட ஒரு பெண்ணின் துணை அவசியமாக உள்ளது. வாமாசார தந்திர யோகம் பெண்ணை ஒரு போகப் பொருளாக மட்டும் கருதுவதில்லை. அவளே அனைத்திற்கும் மூலமான ஆதார சக்தி, பரசக்தி என்றே தந்திர யோகிகள் கொண்டாடுகின்றனர். பெண்ணை தாயாகவும்- சகோதரியாகவும்- தோழியாகவும்- குருவாகவும்கூட வாமாசார தந்திர யோகிகள் பாவித்து ஆராதிக்கின்றனர். ராமகிருஷ்ண பரமஹம்சர் வாமாசாரத்தைப் பின்பற்றிய மகாயோகி, மகாசித்தர். அவர் தனது மனைவி உட்பட அனைத்துப் பெண்களையும் தாயாகவும் பாவித்து பூஜித்தவர்! விவேகானந்தர் உலக மக்கள் அனைவரையுமே தனது சகோதர, சகோதரிகளாக வணங்கியவர்! பெண்ணை குருவாக வணங்கும் தந்திர யோகிகளும் உள்ளனர். அடுத்த இதழில் தட்சிணாசார தந்திர யோகத்தில் "மைதுனம்' என்பதன் உட்பொருள் என்ன? அது எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைக் காணலாம். (தொடரும்) தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields Name * : Email Id * : Left: Press Ctrl+g to toggle between English and Tamil Comment *(500) :